திருநெல்வேலி

விபத்தில் காயமடைந்த பெண் மரணம்

DIN


ஆலங்குளம் அருகே பேருந்து -பைக் மோதியதில் காயமடைந்த பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த பூமிநாதன் மகன் ராஜேஷ் (27).  இவரது மனைவி தமிழ்ச்செல்வி (25). இவரது  சொந்த ஊர் முக்கூடல் அருகே உள்ள பனையங்குறிச்சி. இருவரும் வெள்ளிக்கிழமை பைக்கில் ஆலங்குளம் அருகே புதூரில் உள்ள தமிழ்ச்செல்வியின் சகோதரர் வீட்டுக்கு வந்தனராம். பின்னர் பனையங்குறிச்சிக்கு திரும்பி சென்றபோது தென்காசியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம்.
இதில், காயமடைந்த ராஜேஷ், தமிழ்ச்செல்வி இருவரையும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சனிக்கிழமை தமிழ்ச்செல்வி உயிரிழந்தார். 
இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT