தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து, நகர திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலர் சாதிர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் முத்துபாண்டி, மாவட்ட துணைச் செயலர் ஆயான் எஸ்.நடராஜன், நிர்வாகிகள் கோமதிநாயகம், வழக்குரைஞர் ராஜா, ஒன்றியச் செயலர் ராமையா, ஆறுமுகசாமி, சேக்பரீத் , பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் பேசினார். இதில், சார்பு அணி நிர்வாகிகள் திவான்ஒலி, இசக்கிபாண்டியன், வழக்குரைஞர் ஆ.வெங்கடேசன், நகர நிர்வாகிகள் பாலாமணி, மோகன்ராஜ், வடகரை ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்துல்கனி நன்றி கூறினார்.