பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்தும், தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அம்பாசமுத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன், மாதர் சங்க மாவட்டச் செயலர் கற்பகம், இந்திய புரட்சிகர இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் மேனகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ரவீந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பாலியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தயங்காமல் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இசக்கிராஜன், சுரேஷ், ரபேக்காள், கணபதி, கிளைச் செயலர்கள் பூபதி, லட்சுமி, பாக்கியலட்சுமி, அருள்சக்தி, இளைஞர் பெருமன்ற ஒன்றிய நிர்வாகிகள் அன்ன ஜான், பிரேம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.