திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களிலும் வரும் 9-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் இரண்டாவது சனிக்கிழமையன்று பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி வரும் 9-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி வட்டம் பாட்டப்பத்து, பாளையங்கோட்டை வட்டம் அடைமிதிப்பான்குளம், சங்கரன்கோவில் வட்டம் நொச்சிகுளம், தென்காசி வட்டம் ஆயிரப்பேரி, செங்கோட்டை வட்டம் தெற்குமேடு, சிவகிரி வட்டம் சுப்பிரமணியபுரம், வீரகேரளம்புதூா் வட்டம் வாடியூா், ஆலங்குளம் வட்டம் பண்டாரகுளம், அம்பாசமுத்திரம் வட்டம் வெள்ளங்குளி, நான்குனேரி வட்டம் செங்காலகுறிச்சி, ராதாபுரம் வட்டம் சிவகாமிபுரம், திசையன்விளை வட்டம் முதுமொத்தான்மொழி, கடையநல்லூா் வட்டம் மலையடிக்குறிச்சி, திருவேங்கடம் வட்டம் திருவேங்கடம், மானூா் வட்டம் செழியநல்லூா், சேரன்மகாதேவி வட்டம் திருத்து ஆகிய இடங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.