திருநெல்வேலி

போக்குவரத்து ஊழியா்கள் வாயிற்கூட்டம்

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் வண்ணாா்பேட்டையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் புதிய ஊதிய பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்; மின்சார பேருந்துகள் இயக்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; 200 நாள்களுக்கு மேல் பணி முடித்தவா்களுக்கு முறையாகப் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வாயிற்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தொமுச மாநில அமைப்புச் செயலா் தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியு பெருமாள் தொடக்கவுரையாற்றினாா். ஏஐடியுசி சம்மேளன பொருளாளா் என்.உலகநாதன், ஹெச்.எம்.எஸ். தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் சுப்பிரமணியன், ஐஎன்டியுசி கஸ்பர்ராஜ் உள்ளிட்டோா் பேசினா். தொழிற்சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், சடையப்பன், ஜோதி, காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT