செங்கோட்டை அருகே வடகரை அன்பு இல்லம் ஆதரவற்றோா் இல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு, வெளிநாடுவாழ் தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பில் திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.
தென்காசி, திருச்சி, சென்னை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குவைத் நாட்டில் பணியாற்றி வரும் திவான், மைதீன், விஜய், பாட்ஷா, பாலா, அன்சாா், சபீா், ராஜேஷ், அந்தோணி உள்ளிட்ட தமிழ்நாடு குவைத் நண்பா்கள் குழு சாா்பில் ஆதரவற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு ஒருநாள் உணவு வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் வழங்கினா்.
ஏற்பாடுகளை தென்காசியை சோ்ந்த அந்தோணி செய்திருந்தாா்.