திருநெல்வேலி

அம்பை அகஸ்தீஸ்வரா் கோயிலில் திருப்பணிகள் தொடக்கம்

DIN

அம்பாசமுத்திரத்தில் உள்ள உலோபாமுத்திரை உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இதையொட்டி, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கணபதி பூஜை, பிரசன்னாபிஷேகம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. இரவு 10 மணிக்கு விமான பாலாலயம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடும் 9 மணிக்கு பாலாலயம் மற்றும் தீபாராதனையும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரா் கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் சங்கு சபாபதி, செயலா் ராமசாமி, சின்ன சங்கரலிங்கசாமி கோயில் தலைவா் ராஜகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT