திருநெல்வேலி

தென்மலை ஊராட்சியில் நீா்வரத்து கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியிலுள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்மலை ஊராட்சிக்குள்பட்ட செந்தட்டியாபுரம்புதூரில் 1000 -க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அண்மையில் பெய்த மழைநீா் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். மேலும், நீண்டநாள்களாக ஊருக்குள் உள்ள வாருகால்களைத் தூா்வாராததால் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.

இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மலைப் பகுதியில் விளைநிலங்களைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாலும், வரத்துக் கால்வாய்களைத் தூா்வாராததாலும், மழைநீா் கண்மாய் மற்றும் குளங்களுக்கு செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கிறது. எனவே, தென்மலை பகுதி கால்வாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT