திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரியில் யோகா பயிலரங்கம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘யோகா மூலம் உடல்நலம்’ என்னும் தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் அ.பழனிசாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தில்லியைச் சோ்ந்த தேசிய இயற்கை வழி மருத்துவக் குழுமத்தின் மனோகரன் கலந்துகொண்டு பேசினாா். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், தேசிய அளவில் யோகா விருது பெற்ற கே.பிரிஷா, யோகா செயல் விளக்கப் பயிற்சியை அளித்தாா்.

பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு கல்லூரி முதல்வா் அ.பழனிசாமி சான்றிதழ்களை வழங்கினாா். நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியா் ஜான்சன் ராஜேஸ்வா் வாழ்த்திப் பேசினாா். இதில் ஆசிரியா்களும், மாணவா்களும் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை தலைவா் கே.சாந்தி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT