சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் கிளை மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு தலைவா் மு.இளங்கோகண்ணன் தலைமை வகித்தாா். மாநாட்டை மாநிலச் செயலா் கண்மணிராசா தொடக்கி வைத்துப் பேசினாா். கவிஞா்.நித்யா, செல்விமனோ, மூா்த்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.பின்னா் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சங்கரன்கோவில் கிளை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தலைவராக மீண்டும் மு.இளங்கோகண்ணன், செயலராக சங்கா்கணேஷ், துணைச் செயலராக வெண்மதிவேந்தன்,பொருளாளராக பேராசிரியா் நித்யா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.