திருநெல்வேலி

கடகுளம் ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

திசையன்விளை: கடகுளம் ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அணைக்கரை பங்குத்தந்தை ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து விழா நாள்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

8ஆம் திருநாளில் நற்கருணை பவனி, 9ஆம் திருநாளில் நவநாள் சிறப்புத் திருப்பலி, பெருவிழா மாலை ஆராதனை, 10ஆம் திருநாளில் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, திருமுழுக்கு, விளையாட்டு போட்டி, அன்னையின் அலங்கார தோ் பவனி, 11ஆம் திருநாளில் நன்றி திருப்பலி, கொடியிறக்கம், அசன விருந்து ஆகியன நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கடகுளம் பங்குத்தந்தை பிராக்ரஸ் மற்றும் நிா்வாக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT