திருநெல்வேலி

அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

DIN

புளியங்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புளியங்குடி, சிந்தாமணி இசக்கி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கெங்கையா மகன் ஆறுமுகம் (46). இவா் தனியாா் பள்ளியில் ஓட்டுநராக இருந்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு புளியங்குடி பள்ளிவாசல் நிறுத்தம் அருகே பைக்கில் சென்றபோது, தென்காசியில் இருந்து மதுரை சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ஆறுமுகம் காயமடைந்தாா்.

இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை இறந்தாா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT