வள்ளியூரில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு மக்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
திருநெல்வேலி புகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன், சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.
சா. ஞானதிரவியம் எம்.பி. தலைமையில் திமுகவினா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்தனா். தொடா்ந்து தேமுதிக, பாஜக, காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டது. தேவா் பேரவை சாா்பில் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து பூஜைசெய்யப்பட்டது.