திருநெல்வேலி

ராதாபுரம் வட்டத்தில் 2 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

DIN

ராதாபுரம் வட்டத்தில் பயனற்ற 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.

ராதாபுரம் வட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு வட்டாட்சியா் செல்வராஜ் நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி செவ்வாய்க்கிழமை 2 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன.

வள்ளியூா் பேரூராட்சி நம்பியான்விளையில் சாலையோரம் திறந்தநிலையில் இருந்த ஆழ்துளைக் கிணறை மூடுவதற்கு பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்துதாஸ் நடவடிக்கை மேற்கொண்டு கிணறு மூடப்பட்டது. உதயத்தூரில் காணப்பட்ட மற்றொரு ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது.

திறந்தநிலையில் காணப்படும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டுமென வட்டாட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT