திருநெல்வேலி

நெல்லை-செங்கோட்டை  ரயில் 35 நிமிடங்கள் தாமதம்

DIN

திருநெல்வேலி-  செங்கோட்டை பயணிகள் ரயில் திங்கள்கிழமை சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. 
கொல்லத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 4.50 மணிக்கு வரவேண்டிய பயணிகள் ரயில், குவார்டு பெட்டி மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையால் சுமார் 85 நிமிடங்கள் தாமதமாக  மாலை 6.15 மணிக்கு வந்தது.
இதனால் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை மாலை 6.25 மணிக்கு புறப்படவேண்டிய பயணிகள் ரயில் சுமார் 35 நிமிடங்கள்  தாமதமாக இரவு 7.05-க்கு புறப்பட்டு சென்றது என நிலைய அதிகாரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT