திருநெல்வேலி

சங்கர்நகரில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம்

DIN

திருநெல்வேலியை அடுத்த சங்கர்நகரில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பேரூர் செயலர் எம்.முருகன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.ராஜவடிவு முன்னிலை வகித்தார். 
கூட்டத்தில், சென்னையில் செப்.15-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும், சங்கர் நகர் பெயர் பலகை வைத்துள்ள பேருந்துகள் பண்டாரக்குளம் வரை வந்து திரும்பிச் செல்ல வேண்டும், பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சீராக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், தெரு மின் கம்பங்களில் சிறிய விளக்குகளை அகற்றி சோடியம் விளக்குகள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்,  நிர்வாகிகள் வெங்கண்ணா, மாரியப்பன், கணபதி ராமையா, வீரபெருமாள், நயினார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT