களக்காடு அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்ட தொழிலாளியின் பைக் எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (45). தொழிலாளியான இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த பைக் எரிந்த நிலையில் இருந்ததாம். இதுகுறித்து அவர் அளித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.