திருநெல்வேலி

ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டில் திருட்டு

DIN

வாசுதேவநல்லூரில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர், கலைஞர் காலனியைச் சேர்ந்த சங்கரராஜன் மகன் சிவகுமார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர், கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றாராம். பின்னர், திங்கள்கிழமை (செப். 23) ஊர் திரும்பியபோது, வீட்டின் வெளிப்புறப் பூட்டு உடைந்துகிடந்ததாம்.   வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, எல்இடி டிவி மற்றும் பீரோவில் வைத்திருந்த வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். திருடுபோன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 20 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT