வாசுதேவநல்லூரில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வாசுதேவநல்லூர், கலைஞர் காலனியைச் சேர்ந்த சங்கரராஜன் மகன் சிவகுமார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர், கடந்த 15ஆம் தேதி குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றாராம். பின்னர், திங்கள்கிழமை (செப். 23) ஊர் திரும்பியபோது, வீட்டின் வெளிப்புறப் பூட்டு உடைந்துகிடந்ததாம். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, எல்இடி டிவி மற்றும் பீரோவில் வைத்திருந்த வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம். திருடுபோன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 20 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வாசுதேவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.