சுரண்டை ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மூலவர், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, உத்சவருக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.