திருநெல்வேலி

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: குலாலர் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு ஆதரவு

DIN


நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என குலாலர் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் தீவிர பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
குலாலர் முன்னேற்ற கழக மாவட்டச்  செயலர் மாரியப்பன், நிர்வாக உறுப்பினர்கள் கணேசன், சண்முகம், கங்காதரன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT