திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரி பள்ளியில்மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி

DIN


திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி பள்ளியில் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், திருநெல்வேலி சிலம்பாட்டக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய ஜூனியர், சீனியர் மாணவர்- மாணவிகளுக்கான சிலம்பாட்டப் போட்டிகள் திருநெல்வேலி மதிதா இந்துக்கல்லூரி பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது. 
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதிமுக மாநகர் மாவட் அதிமுக செயலர் தச்சை கணேச ராஜா போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்.  இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச்செயலர் சுதா கே.பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், திருநெல்வேலி சிலம்பாட்டக் கழக செயலர் சிலம்பு சுந்தர், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT