வீரகேரளம்புதூர் அருகே பைக்குகள் மோதியதில் காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் இறந்தார்.
வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்குளத்தைச் சேர்ந்தவர் ஆண்டபெருமாள் (70). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை மாலை ஊருக்கு வடபுறமுள்ள வயலுக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக், இவரது பைக் மீது மோதியதாம். இதில், காயமடைந்த ஆண்டபெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார்.
வீரகேரளம்புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து, மற்றொரு பைக்கை ஓட்டிவந்த பாளையங்கோட்டை, ரகுமத்நகரைச் சேர்ந்த கருப்பசாமி (22) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.