திருநெல்வேலி

பாளை.யில் பல்பொருள் அங்காடிக்கு சீல்

DIN

பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு சனிக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகைக் கடைகள், காய்கனி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி இயங்கி வருகின்றன. அக்கடைகள் அனைத்தும் உரிய விதிகளை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவின்படி, மாநகர நல அலுவலா் டி.என்.சத்தீஸ்குமாா், உதவி ஆணையா் பிரேம் ஆனந்த் ஆகியோா் அறிவுரைப்படி, சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் நடராஜன், பெருமாள் ஆகியோா் மகாராஜ நகரில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது உரிய விதிகளை கடைப்பிடிக்காமல் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த அங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT