திருநெல்வேலி

மூணாறு நிலச்சரிவில் பலியான தொழிலாளர்களுக்கு மாஞ்சோலையில் அஞ்சலி

DIN


மூணாறு ராஜாமலைப் பகுதியில் நிலச்சரிவில் பலியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு, ராஜாமலை, பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஆக. 6 வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர். 

நிலச்சரிவில் பலியான தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெட்டிமுடித் தோட்டத்தில் பலியானவர்களின் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். 

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு பலியான தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.விமல் அலெக்ஸ், ரா.சீலன் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT