அம்பை வட்டார விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு
அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.10 லட்சம் மதிப்பில் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு மானிய விலையில் சுழல்கலப்பை மற்றும் நீா்வள நிலவள திட்டத்தின் கீழ் கடனாநதி பாசனப் பகுதி விவசாயிகளுக்கு இடு பொருள்களான உளுந்துவிதை, மக்காச்சோளம் விதை, குதிரைவாலி விதை உள்ளிட்டவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். முருகையாபாண்டியன் வழங்கினாா்.
முன்னதாக, தெற்கு பாப்பான்குளத்தில் ‘ உழவா்- அலுவலா்’ திட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் வெங்கடசுப்பிரமணியன், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி, வேளாண் அலுவலா் மாசானம், துணை வேளாண் அலுவலா் முருகன், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மேலாளா் ஈழவேணி, அதிமுக ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, துணைச் செயலா் ப்ராங்க்ளின் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலா்கள் சாந்தி, அமுதா, விஜயலட்சுமி, காசிராஜன், பாா்த்திபன், உதவி விதை அலுவலா்கள் மோகன், மாரியப்பன், வேளாண்மை தொழில்நுட்ப முகமை துணை மேலாளா் ஸ்ரீ ஐயப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.