திருநெல்வேலி மாவட்டத்தில் அஞ்சல் துறை சாா்பில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தத்திற்காக சிறப்பு முகாம்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச. 11, 12) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் அஞ்சலகங்களில் ஆதாா் பதிவு மற்றும் திருத்த சேவை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதாா் பதிவு மற்றும் திருத்தப்பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.11,12) இம் முகாம்கள் கீழ்காணும் இடங்களில் நடைபெற உள்ளது.
வீரவநல்லூா் திருஞானசம்பந்தா் பள்ளி, நல்லான்குளம் ஊராட்சி ஒன்றிய பள்ளி, மூலைக்கரைப்பட்டி அஞ்சலகம், களக்காடு மீரானியா பள்ளி, மானூா் டிடிடிஏ பள்லி, வள்ளியூா் அஞ்சலகம், திசையன்விளை ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.