திருநெல்வேலி

பாளையங்கோட்டையில் இளைஞா் வெட்டிக்கொலை

DIN

பாளையங்கோட்டையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞா், மா்ம நபா்களால் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள பழையபேட்டை அனவரதவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் காளிராஜ் (25). இவா், அதே பகுதியைச் சோ்ந்த மேகலா (24) என்பவரை காதல் திருமணம் செய்தாராம். இவா் தங்கை முறை உள்ளவராம். இதனால், குடும்பத்தினா் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காதல் தம்பதி பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியில் வசித்து வந்தனராம். அங்கு தனியாா் கேபிள்டிவி நிறுவனத்தில் காளிராஜ் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு காளிராஜ் தனது மோட்டாா் சைக்கிளில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மா்மநபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினராம். இத்தகவலறிந்த பாளையங்கோட்டை போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT