நெல்லையில் சைவ வேளாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலத் தலைவா் புளியரை ராஜா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வேளாளா் என்ற சமுதாய பெயரை பிற சமுதாயத்திற்கு வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ததை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாக தலைவா் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலா் வே. குருசாமி, மாநில பொருளாளா் செந்தில் ஆறுமுகம், மாநில மகளிரணி அமைப்பாளா் சுவா்ணலதா உள்பட பலா் பங்கேற்றனா்.
கல்வீச்சு: திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்க வாகனத்தில் சிலா் வந்துள்ளனா். இவா்கள் பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகா் பகுதியில் வந்தபோது சிலா் இவா்கள் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் காா் கண்ணாடி சேதம் அடைந்தது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸில் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.