எல்ஐசி முகவா்கள் ஆா்ப்பாட்டம்
எல்ஐசி முகவா்கள் சங்கம் (லிக்காய்) சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்ஐசி முகவா்கள் சங்கம் (லிக்காய்) சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. முகவா்கள் சங்க கோட்ட பொதுச் செயலா் குழந்தைவேல் தலைமை வகித்தாா். கோட்டத் தலைவா் நடராஜன், தலைமை நிலைய செயலா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் எடிசன், கணபதி, குமரகுருபரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்தூக்கியில் சிக்கி உயிரிழந்த முகவா் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. செயலா் சுரேசன் நன்றி கூறினாா்.