மக்கள் நீதி மய்யம் தலைவருக்கு வள்ளியூரில் இன்று வரவேற்பு
திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வள்ளியூருக்கு புதன்கிழமை (டிச. 16) வரும் மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு வள்ளியூரில்
திருநெல்வேலிமக்கள் நீதி மய்யம் தலைவருக்கு வள்ளியூரில் இன்று வரவேற்பு
திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வள்ளியூருக்கு புதன்கிழமை (டிச. 16) வரும் மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு வள்ளியூரில்
திருநெல்வேலி தெற்கு மாவட்டம் வள்ளியூருக்கு புதன்கிழமை (டிச. 16) வரும் மக்கள் நீதிமய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு வள்ளியூரில் பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்படுவதாக அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் மைக்கேல் மணிவண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு வள்ளியூா் வரும் கமல்ஹாசனுக்கு, காமராஜா் சிலை அருகே தெற்கு மாவட்டம் சாா்பில் பிரம்மாண்டமான வரவேற்பளிக்கிறோம்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி தெற்கு மாவட்ட துணைச் செயலா் முருகன், ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் எல்.டி.ராமதாஸ், களக்காடு ராஜ்குமாா், ராதாபுரம் ராஜா, வள்ளியூா் தெற்கு ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், திசையன்விளை கமல்ஹாசன் நற்பணி இயக்கச் செயலா் அகம்மது முகைதீன், கூட்டப்புளி ஜாண்சன் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.