திசையன்விளையில் வட்டாட்சியா் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா
திசையன்விளை வட்டாட்சியா் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திசையன்விளை வட்டாட்சியா் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ரூ. 3 கோடி மதிப்பில் திசையன்விளை கால்நடை மருத்துவமனை அருகே கட்டப்படவுள்ள, வட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு, ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பேசினாா்.
விழாவில், வட்டாட்சியா் ரஹ்மத்துல்லா, துணை வட்டாட்சியா் ரமேஷ், திசையன்விளை ஜெயலலிதா பேரவைச் செயலா் வி.பி.ஜெயக்குமாா், டிம்பா் டி.செல்வராஜ், ஜெபத்துரை, வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் சாந்தகுமாா், டி.சுயம்புராஜன், சி.ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.