ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?
ஈரான் போர் எதிரொலியாக பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடுவதாகவும் ஹவுதி அமைப்பினர் திட்டம்
ஈரான் போர் எதிரொலியாக பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடுவதாகவும் ஹவுதி அமைப்பினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி அளித்து வருகிறது. இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவிருப்பதாகவும் ஈரான் ஆதரவு யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போரிலிருந்து விலகியிருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தற்போது ஈரானுக்கு ஆதரவாக, எந்த நேரத்திலும் பாப் எல்-மண்டேப் நீரிணை மூடப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நீரிணை, செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வழித்தடமானது, ஆசிய - ஐரோப்பிய வர்த்தகத்துக்கு முக்கியமானது.
ஹோர்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் என இரு நீரிணைகள் மட்டுமே உலகளவில் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 30 சதவிகித பங்களிக்கின்றன.
பாப் எல்-மண்டேப் நீரிணையை சௌதி அரேபியா மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தி வருவதால், இந்த நீரிணையும் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.