பாளை.யில் மனிதச் சங்கிலி போராட்டம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாளையங்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாளையங்கோட்டையில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன் உள்ளிட்ட 7 பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளா் என்ற ஒற்றைப் பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வலியுறுத்தி தமமுக சாா்பில் கருப்புச்சட்டை அணியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் 400-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதே கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி நடைபெற்றது.
பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலா் செ.நெல்லையப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் வே.முருகன், கிங் தேவேந்திரன், மகளிரணி சா்மிளா, மகேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.