முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு ஆசிரியா் வெனிஸ் தலைமை வகித்தாா். தேவேந்திரன் முன்னிலை வகித்தாா். ராஜாமணி வரவேற்றாா். மாநிலச் செயலா் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 5000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் நான்குனேரி வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பரமசிவம் முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் ஜஸ்டின் கிளாடியோ வரவேற்றாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் சிறப்புரையாற்றினாா். அகஸ்டின் கீதாராஜ், ஜோசப்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், சுனிதா, அமுதாள், முத்துலெட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →