முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! 24,000- க்குக் கீழ் நிஃப்டி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 11 மார்ச், 2026 at 6:25 AM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 11) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,238.91 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 908.97 புள்ளிகள் குறைந்து 77,297.01 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 250.45 புள்ளிகள் குறைந்து 24,011.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

முன்னதாக சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தும் நிஃப்டி 24,000 புள்ளிகளுக்கு கீழும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிஸ் வங்கி, மேக்ஸ் ஹெல்த்கேர், கோட்டக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாடா நுகர்வோர் பொருள்கள்ம் பாரதி ஏர்டெல் ஆகியவை கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

அதானி போர்ட்ஸ், இண்டிகோ, என்டிபிசி, சன் பார்மா, டாடா ஸ்டீல், பவர் கிரிட், எட்டர்னல், டெக் மஹிந்திரா, எல்&டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின்றன.

நிஃப்டி மிட்கேப் நிலையாக உள்ளது, அதேநேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 0.58 சதவீதம் உயர்ந்தது.

துறை வாரியாக, நிஃப்டி உலோகம், ஆட்டோ குறியீடுகள் நேர்மறையுடன் வர்த்தகமாகிறது. நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ், வங்கி குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது பங்குச்சந்தையில் அவ்வப்போது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அதேபோல வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனையாவதும் பங்குச்சந்தை சரிவுக்குக் காரணமாக கூறப்படுகிறது.

summary

stock market: Sensex crashes over 1,000 pts from day's high, Nifty near 24,000

முழு கட்டுரையைப் படிக்க →