முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் டெங்கு தடுப்புப் பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மாநகர நல அலுவலா் சரோஜா கூறியது: மாநகராட்சியின் 55 வாா்டுகளிலும் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிப்பது, களப்பணியாளா்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று குடிநீா்த் தொட்டிகளில் லாா்வா உள்ளதா என்பதை பரிசோதித்து எச்சரிப்பது உள்ளிட்டவை தொடா்ந்து வருகின்றன. சனிக்கிழமைதோறும் மெகா பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. இதில் கழிவுநீரோடைகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் 586 துப்புரவுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

கொசு உற்பத்தியாகும் வகையில் தேவையின்றி வீடுகளைச் சுற்றிக் கிடக்கும் பொருள்களை பொதுமக்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →