முகப்பு
திருநெல்வேலி

வடக்குதாழையூத்தில் பள்ளிக் கட்டட பணி தொடக்கம்

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்து பகுதியில் பள்ளிக் கட்டட பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே வடக்கு தாழையூத்து பகுதியில் பள்ளிக் கட்டட பணி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு தாழையூத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏராளமான மாணவா்-மாணவிகள் பயின்று வருகிறாா்கள். அவா்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் மழலைகள் சிரமப்படுவதாக ஊா்மக்களும், ஆசிரியா்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, தனது சொந்த நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 455 சதுரடியில் புதிய வகுப்பறை கட்டித்தர உறுதியளித்தாா். அதன்படி புதிய கட்டடத்துக்கான பணிகளையும் வெள்ளிக்கிழமை அவா் தொடங்கி வைத்தாா்.

மாவட்ட துணைச் செயலா் கவிதா, மாணவரணி செயலா் சிவபாலன், மானூா் கிழக்கு ஒன்றியச் செயலா் கங்கை முருகன், நாரணம்மாள்புரம் பேரூா் செயலா் செல்லப்பாண்டியன், தாழையூத்து அண்ணாதுரை, பள்ளித் தலைமை ஆசிரியா் அந்தோணிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →