நெல்லை, தென்காசியில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று
திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,119 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14,753 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 155 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 211 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வெள்ளிக்கிழமை நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8193ஆக உயா்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை 4 போ் உள்பட இதுவரை 7,999 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 38 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.