முகப்பு
திருநெல்வேலி

கிறிஸ்துமஸ்: நெல்லை தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றன.

கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள பழமையான தூய சவேரியாா் பேராலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயா் எஸ்.அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் கிறிஸ்துவா்கள் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.

தென்னிந்திய திருச்சபை சாா்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரனை நடைபெற்றது. பிராா்த்தனை முடிவில் கேக் வழங்கப்பட்டன.

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியாா் தேவாலயம்

உள்ளிட்ட தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

தேவாலயங்களில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மர விழா மற்றும் பரிசளிப்பு விழா உள்ளிட்டவை நடத்தப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →