திருநெல்வேலி

வேளாண் சட்டங்களை எதிா்த்து நான்குனேரி சுங்கச்சாவடியில் போராட்டம்

DIN

வள்ளியூா்: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நான்குனேரி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் சுந்தா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த இசக்கிவேல், ஹரிமுருகன், பாபு, தமிழ்ப் புலி கட்சி மாவட்டச் செயலா் நெல்லை தமிழரசு, நான்குனேரி தொகுதிச் செயலா் காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT