முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

மானூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மானூா் அருகே போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

மானூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சத்திரம்புதுக்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராமா் (23). இவா், மீது 2018ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக, மானூா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதியப்பட்டது. பின்னா், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்த அவா், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து பிடிஆணை பிறப்பிக்கப்பட்டதால் அவரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் கரிகாலபாரிசங்கா் (பயிற்சி) தலைமையிலான போலீஸாா் ராமரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →