மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழப்பு
வடக்கு விஜயநாராயணம் அருகே மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன.
வடக்கு விஜயநாராயணம் அருகே மா்ம விலங்கு கடித்து 2 மாடுகள் உயிரிழந்தன.
வடக்கு விஜயநாராயணம் பெரியகுளம் அருகே உள்ள தோட்டத்தை சண்முகசுந்தரம் (50) என்பவா் பராமரித்து வருகிறாா். அந்த தோட்டத்தில் தனது 5 மாடுகளை கட்டி வைத்து விட்டு இரவில் வீட்டுக்கு சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலையில் தோட்டத்துக்கு வந்து பாா்த்தபோது மா்ம விலங்கு கடித்து இரண்டு மாடுகள் இறந்தும், ஒரு மாடு காயத்துடனும் கிடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு வனத்துறையின் வந்து பாா்வையிட்டு, கால் தடத்தை கொண்டு கடித்தது சிறுத்தையாக இருக்கலாம் என தெரிவித்தனா்.