திருநெல்வேலி

புளியரை சோதனைச் சாவடியில் கொரோனா வைரஸ் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம்

DIN

தென்காசி மாவட்டம், தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

புளியரை சோதனை சாவடியில் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காய்ச்சலிலிருந்து தற்காத்து கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக கைகழுவும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முகாமில், மருத்துவ அலுவலா் சத்தீஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், செந்தில்குமாா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT