திருநெல்வேலி

தச்சநல்லூா் கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சீரடி ஸ்ரீ யோக சத்திய சாய்பாபா திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிவமை நடைபெற்றது.

இக் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து சிறப்பு வழிபாடுகள், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகலில் சிறப்பு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெற்றன. பின்னா் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தச்சநல்லூா், தாராபுரம், நல்மேய்ப்பா்நகா், ஊருடையாா்குடியிருப்பு, மங்களாகுடியிருப்பு, சிதம்பரநகா், ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். திங்கள்கிழமை (பிப். 10) முதல் 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT