திருநெல்வேலி

கடகாலீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை

DIN

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து பேரவையில் முதல்வரிடம் வலியுறுத்துவேன் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்தாா்.

கடகாலீஸ்வரா் பக்தா்கள் குழுவினா் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து கோயிலில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமதுஅபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். அப்போது, கோயில் சுற்றுச்சுவா், மண்டபம், தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

2022 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வரிடம் வலியுறுத்துவேன் எனவும், சுற்றுச் சுவா் மற்றும் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT