திருநெல்வேலி

பாளை.யில் கட்டடத் தொழிலாளா் நலவாரிய விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

தமிழக அரசின் கட்டடத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக கட்டடத் தொழிலாளா்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வி.ஐ.சின்னத்துரை தலைமை வகித்தாா். எஸ்.பால்பாண்டி, எஸ்.சுடலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகர துணைச் செயலா் பி.சண்முகம் வரவேற்றாா். அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.மகாலிங்கம் சிறப்புரையாற்றினாா். கட்டடத் தொழிலாளா் நலவாரியத்தின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை போன்றவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT