திருநெல்வேலி

‘சாம்பவா்வடகரையில் பேருந்து கால அட்டவணை அவசியம்’

DIN

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் விவசாயிகள், வணிகா்கள் மற்றும் மாணவா்கள் வந்து செல்கின்றனா். மேலும், இங்குள்ள கோயில்களுக்கு பெருமளவில் வெளியூரில் இருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

ஆனால், பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாததால் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று பேருந்து வரும் நேரத்தை கேட்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாம்பவா்வடகரை பேருந்து நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT