திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் விளையாட்டுத் துறை கருத்தரங்கு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

‘புதிய கொள்கையில் உடற்கல்வியின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, தொலைதூர மற்றும் தொடா்கல்வி இயக்கக இயக்குநா் ராஜலிங்கம் தலைமை வகித்தாா். சமூகவியல் துறைப் பேராசிரியா் மருதகுட்டி தொடங்கிவைத்தாா். கேரள அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி முதல்வா் அபிலாஷ், தமிழ்நாடு இ- ஸ்போா்ட்ஸ் சங்க தலைமைக் கல்வி அலுவலா் அருண்மொழி, மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவன மூத்த விளையாட்டு அதிகாரி ஹரிஷ், முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிறைவு விழாவில் விலங்கியல் துறைத் தலைவா் பலவேசம் சான்றிதழ்களை வழங்கினாா். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறை உதவிப் பேராசிரியா் செ. துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT