திருநெல்வேலி

மாநகர சாலைகளை சீரமைக்கக் கோரி தா்னா

DIN

மாநகர சாலைகளை சீரமைக்கக் கோரி, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் புதைசாக்கடை திட்டம், குடிநீா்க் குழாய் பதிக்கும் திட்டங்களால் சேதப்படுத்தப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதை கண்டித்து மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில், மாநகராட்சி அலுவலகத்தில் இந்த தா்னா நடைபெற்றது. அமைப்பின் தலைவா் மா. மாரியப்பபாண்டியன் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் அளித்த மனு: சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலையில் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். மேலும், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாநகர சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT