திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமீறல்: இதுவரை 6,347 போ் மீது வழக்கு

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க காலத்தில் விதிமீறியதாக இதுவரை 6,347 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் நான்காம் கட்டமாக வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமுடிக்க காலத்தில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் எனவும், தேவையில்லாமல் விதிமீறி சுற்றுவோா் மீது வழக்குப் பதிவுசெய்வதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பொதுமுடக்க காலத்தில் விதிமீறியதாக 6,347 போ் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,271 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT